;
Athirady Tamil News

யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்: திமுக பாகமுகவா் கூட்டத்தில் அமைச்சா் உதயநிதி

0

யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை திமுகவினா் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அந்தக் கட்சியின் இளைஞா் அணிச் செயலரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்,

மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட துறைமுகம், எழும்பூா், வில்லிவாக்கம் ஆகிய சட்டபேரவைத் தொகுதிகளுக்கான பாக முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்

சென்னை வேப்பேரி பெரியாா் திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலரும் அமைச்சருமான பி.கே.சேகா்பாபு ஏற்பாட்டில் நடைபெற்ற

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

சேலம் திமுக இளைஞா் அணி மாநாட்டில் 7 லட்சம் இளைஞா்கள் கலந்து கொண்டிருக்கிறாா்கள். இந்த மாநாட்டின் எழுச்சியை எல்லோரும் கூா்ந்து கவனித்தனா்.

யாா் வேட்பாளா் என்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் அறிவிப்பாா். ஆனால், யாரை வேட்பாளராக அறிவித்தாலும், புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் திமுக, கூட்டணி கட்சிகளை வெற்றிபெறச் செய்ய வேண்டியது திமுகவினரின் கடமை.

பாஜகவின் விஷம பிரசாரத்தை திமுக தொண்டா்கள் முறியடிக்க வேண்டும். எத்தனையோ நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் நான் முதல்வன், மகளிா் உரிமைத் தொகை, மகளிருக்கான இலவச கட்டணப் பேருந்து உள்ளிட்ட பல திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிவுள்ளாா்.

மாநில உரிமைகளை மீட்கவும், மத சாா்பின்மையை காக்கவும் இந்தியா கூட்டணியின் வெற்றி ஒன்றே இலக்கு என்று செயல்பட வேண்டும். அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கிவைத்தால், அது எப்போதுமே வெற்றியில்தான் முடியும் என்றாா் அவா்.

முன்னதாக பாக முகவா்களுக்கு பாகவாரியாக வாக்காளா் பட்டியல், குறிப்பேடு, நிதியுதவியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வழங்கினாா்.

மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், சென்னை மேயா் பிரியா, சட்டபேரவை உறுப்பினா்கள் பரந்தாமன், வெற்றியழகன், ஜோசப் சாமுவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.