;
Athirady Tamil News

இம்ரான்கானுக்கு 34 வருட சிறை : விதிக்கப்பட்ட புதிய உத்தரவு

0

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை 4 வழக்குகளில் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டஅவர் லாகூரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இம்ரான்கானுடன் மனைவி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர்
வெவ்வேறு வழக்குகளில் இம்ரான்கானுடன் அவரது மனைவி புஷ்ரா பீவியும், முன்னாள் வெளியுறவு அமைச்சர் மஹ்மூத் ஷா குரேஷியும் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இம்ரான்கானும், குரேஷியும் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் புஷ்ரா பீவி, கிளைச்சிறையாக அறிவிக்கப்பட்ட இம்ரான்கானின் இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

சிறைத்துறை புதிய உத்தரவு
அடியாலா சிறையில் இம்ரான்கானுக்கும், குரேஷிக்கும் உயர்மட்ட கைதிகள் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயர்மட்ட கைதிகளாக உள்ள போதிலும் இம்ரான்கானும், குரேஷியும் சிறை வாளகத்தில் பணிகளை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என சிறை நிர்வாகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. எனினும் இருவரும் எந்த மாதிரியான பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளனர் என்கிற தகவல் வெளியாகவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.