;
Athirady Tamil News

வெலிக்கடை சிறைச்சாலையில் நெருக்கடி

0

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கைதிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார்.

நோயாளிகளாக சிகிச்சை பெறும் கைதிகளுக்கு 185 படுக்கைகள் உள்ளதாகவும், ஆனால் தற்போது 344 கைதிகள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அம்மைநோய்த்தொற்று
இவர்களில் 54 கைதிகள் அம்மைநோய்த்தொற்றுக்குள்ளானவர்கள் என்றும் பணிப்பாளர் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் ஐந்து விடுதிகள் காணப்படுகின்றன.

இங்கு கிளினிக்கில் சிகிச்சைபெறும் நோயாளிகள் 61 பேரும் 62 தொற்றா நோயாளிகளும், 82 தொற்று நோயாளிகளும், 110 மன நோயாளிகளும் 29 காசநோயாளிகளும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் முப்பது சிறைச்சாலைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சிறைக்கும் தனி மருத்துவமனை உள்ளது.

எனினும் வெலிக்கடை பிரதான சிறைச்சாலை வைத்தியசாலையில் மாத்திரமே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை , முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும் வெலிக்கடை பிரதான சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.