;
Athirady Tamil News

யாழ். வடமராட்சியில் வீதியில் நெல் பரவிக் கொண்டிருந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி

0

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி விபத்துகுள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் கச்சாய்- புலோலி வீதியில் மாக்கிராய் பகுதியில் இன்று (11) காலை குறித்த விபத்து இடம்பெற்றது.

வீதியில் நெல்லை பரவிக் கொண்டிருந்தவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துத் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.