;
Athirady Tamil News

நாட்டில் அதிகரிக்கும் போதை மாத்திரை பயன்பாடு்: நிஹால் தல்துவ சுட்டிக்காட்டு

0

இலங்கையில் போதைப்பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையினால், அதற்கு பதிலாக மாத்திரைகளை பயன்படுத்தும் செயற்பாடு அதிகரித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதிப் காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் போது இது தொடர்பான தகவல்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகளவிலான போதை மாத்திரைகள் மீட்பு
கடந்த நாட்களில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது 3,63,438 போதை மாத்திரைகளை காவல்துறையினர் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவதைப் போன்று, முன்னர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சில நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.