;
Athirady Tamil News

இலங்கைப் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சீன பெண்

0

களுத்துறை – பேருவளை மங்கள மாவத்தையில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் நேற்று (20.02.2024) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், சந்தேகநபரான பெண்ணை களுத்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பேருவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.