;
Athirady Tamil News

சுட்டெரிக்கும் சூரியன் ; மக்களுக்கு எச்சரிக்கை!

0

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலையின் காரணமாக வெளியில் தேவையின்றி செல்வதை தவிர்ப்பதுடன் , அடிக்கடி நீராகாரங்களை எடுத்து கொள்ளுமாறும் வைத்திய நிபுணர்கள் மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இது குறித்து சிரேஷ்ட வைத்திய ஆலோசகர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம கூறுகையில்,

நீர்வற்றிப் போகாமல் பாதுகாக்க நீர், இளநீர்
அதீத வெப்பதை தடுக்க மக்கள் , நீர், இளநீர் போன்ற இயற்கை குளிர்பானங்களை பருகுவதன் மூலம் உடலில் நீர்வற்றிப் போகாமல் பாதுகாக்கலாம்.

அதிகம் வெப்பத்தினால் சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், முதியவர்கள் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் உடலில் நீர்வற்றும் அபாயத்தில் உள்ளனர்.

எனவே, இவர்கள் அதிக வெப்பம் உள்ள நேரங்களில் முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதோடு உடலில் நீர்வற்றிப் போகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும் , பாடசாலை சிறுவர்கள் அனாவசியமாக வெளியில் செல்வதை தவிர்ப்பதுடன், , சிறுவர்கள் வீட்டிற்குள் அல்லது நிழலில் விளையாட பெற்றோர்கள் இடமளிக்க வேண்டும் எனவும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.