;
Athirady Tamil News

பாடசாலை மாணவியை மோதிய மோட்டார் சைக்கிள் ; சாரதி தப்பியோட்டம்

0

பாடசாலை மாணவி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று புதன்கிழமை (21) காலை மடிதியவெல ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றது.

வீதியைக் கடக்க முற்பட்ட 8 வயதுடைய பாடசாலை மாணவி மீதி மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது இதில் காயமடைந்த மாணவி சிகிச்சைக்காக மீரிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில் தப்பியோடிய மோட்டார் சைக்கிள் சாரதியைக் கைதுசெய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொட்டதெனியவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.