;
Athirady Tamil News

பூமியில் விழும் அபாயத்தில் செயற்கைகோள்: அச்சத்தில் விண்வெளி நிறுவனம்!

0

ஐரோப்பா விண்வெளி ஆய்வு நிறுவனம் கடந்த 1990-ம் ஆண்டில் ஓசோன் படலத்தை கண்காணிக்கும் வகையில் ஒரு செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது.

‘கிராண்ட்பாதர்’ என பெயரிடப்பட்ட இந்த விண்கலனை ஐரோப்பா விண்வெளி நிறுவனம் கட்டுப்படுத்தி இயக்கி வந்தது. இவ்வாறான நிலையில் அதன் ஆயுட்காலம் முடிவடைந்து தன்னுடைய சுற்றுப்பாதையை விட்டு விலகியது.

இந்த நிலையில் குறித்த செயற்கைகோளின் உடைந்த பாகங்கள் பூமியின் மீது விழும் அபாயம் உள்ளதாக ஐரோப்பா விண்வெளி நிறுவன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாதம் இறுதிக்குள் அது பூமியில் விழலாம் என கணக்கீடப்பட்டு உள்ளது.

இதனை கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் எங்கு விழும் என சொல்லமுடியவில்லை, இருப்பினும் ஐரோப்பாவில் உள்ள கடல்களில் விழ வைக்க முயற்சிகள் நடக்கின்றன.

இதன் பெருமளவிலான பாகங்கள் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் சில பாகங்கள் வளிமண்டலத்தை தாண்டி பூமியில் விழும் வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.