;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் உயர்கல்விக் கண்காட்சி இன்று ஆரம்பம்

0

யாழ் உயர்கல்விக் கண்காட்சி இன்று காலை ஆரம்பமாகியுள்ளது.

கண்காட்சி கூடத்தை யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள வலம்புரி விருந்தினர் விடுதியில் இன்று(24) காலை ஆரம்பமாகியுள்ள இந்த கண்காட்சி நாளையும்(25) நடைபெற இருக்கிறது.

குறித்த கண்காட்சியை காலை 9 மணி தொடக்கம் மாலை 6 மணிவரை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்காட்சி கூடத்தை அதிகமான பாடசாலை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.