;
Athirady Tamil News

சாய்ந்தமருது மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ள புலமைப்பரிசில் திட்டம்

0

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியில் உள்ள 30 கணித விஞ்ஞான மாணவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவுடன் புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினை இந்த வருடம் முதல் அமுல்படுத்த உத்தேசித்துள்ளதாக கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் எம்.எம். நசீர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் பிரதான அலுவலகத்தில் நேற்று (23) இரவு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புலமைப்பரிசில் திட்டம்
மேலும் தெரிவிக்கையில். கிழக்கு நட்புறவு ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருட நிறைவை முன்னிட்டு 30 கணித விஞ்ஞான மாணவர்களுக்கு தலா 5000 ரூபா கொடுப்பனவுடன் புலமைப்பரிசில் திட்டம் ஒன்றினை இந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ளோம்.அதற்கான திட்டம் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் இத்திட்டம் ஆரம்பமாகும்.இதில் சாஹிரா தேசிய பாடசாலை, மஹ்மூத் பாலிகா பெண்கள் பாடசாலை மாணவர்கள் எவ்வித பாகுபாடும் இன்றி உள்வாங்கப்படுவார்கள்.இதை விட அடுத்த வருடங்களில் ஏனைய பாடசாலை மாணவர்களையும் உள்வாங்க தீர்மானித்துள்ளோம்.

காரைதீவு, நிந்தவூர், மருதமுனை ,கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களும் எதிர்காலங்களில் இந்த திட்டங்களில் உள்வாங்கப்படுவார்கள்.

தீர்மானங்கள்
இதை விட அடுத்த திட்டமாக வயதான மற்றும் ஊனமுற்ற இளைஞர்களுக்கான உபகரணங்களை இந்த வருடத்தினுள் வழங்க தீர்மானித்துள்ளோம். இதில் 30 பேர் உள்வாங்கப்படுவார்கள்.

மேலும், 30 பேருக்கு இலவச நீர் இணைப்பும் 30 பேருக்கு மின்சார இணைப்பினையும் பெற்றுக்கொடுக்க தீர்மானங்களை எடுத்திருக்கின்றோம் என எம்.எம். நசீர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.