;
Athirady Tamil News

மீண்டும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்! முக்கிய தளபதி பலி

0

பாகிஸ்தான் பகுதிக்குள் மீண்டும் ஈரான் நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கத்தின் தளபதி இஸ்மாயில் ஷாபக்ஷ் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2012-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கம் அடிக்கடி ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் செயல்படும் ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கத்தினரை குறிவைத்து ஈரான் இராணுவம் கடந்த மாதம் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு பதிலடியாக ஈரானின் தென்கிழக்கு பகுதியில் பாகிஸ்தானுக்கு எதிரான பிரிவினைவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் பின்னர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில் அமைதி திரும்பியது.

இந்த நிலையில் ஈரான் இராணுவம் மீண்டும் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியதியதில் ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கத்தின் தளபதி இஸ்மாயில் ஷாபக்ஷ் மற்றும் சிலர் கொல்லப்பட்டதாக ஈரான் அரசு ஊடக தகவலை மேற்கோள் காட்டி ஈரான் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் பற்றம் ஏற்பட்டுள்ளதுடன் ஈரானின் தென்கிழக்கு மாகாணத்தில் தீவிரமாக செயல்பட்டு வரும் ஜெய்ஷ் அல்-அட்ல் இயக்கத்தை பயங்கரவாத குழுவாக ஈரான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.