;
Athirady Tamil News

துண்டு துண்டாக்கப்பட்ட மனித உடல்.. பெங்களூருவை உலுக்கிய கொலை சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி!

0

கர்நாடக மாநிலம், பெங்களூருவில், 70 வயது மூதாட்டி ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கொலையை மறைக்க உடலை துண்டு துண்டாக வெட்டி நகரம் முழுவதும் வீசிச் செல்வது தற்போது கொலையாளிகள் மத்தியில் ட்ரெண்டாக உள்ளது. நகரங்களில் நடைபெறும் இதுபோன்ற கொலைகள் ஒட்டு மொத்த மக்களையும் பதற்றத்தில் ஆழ்த்திவிடும் நிலையில், கொலையாளி சகஜமாக மக்களோடு மக்களாக வலம் வந்து கொண்டிருப்பார்.

இதுபோன்ற ஒரு கொலை தான் கர்நாடக மாநிலத்தையே உலுக்கியுள்ளது. பெங்களூருவின் முக்கிய பகுதியில் மூதாட்டியின் துண்டு துண்டாக்கப்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டிருப்பது அந்நகரையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவத்தின் திடுக்கிடும் பின்னணி என்ன?

கர்நாடக மாநிலம் பெங்களூரு, கே.ஆர்.புரம் பகுதியில் கைவிடப்பட்ட ஒரு வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் குப்பைகளுக்கு நடுவே ஒரு ட்ரம் கிடந்துள்ளது. அப்பகுதி வழியாக நடந்து சென்றவர்கள் அந்த ட்ரம்மிலிருந்து துர்நாற்றம் வீசியதால் உடனே போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

விரைந்து வந்த கே.ஆர்.புரம் போலீசார் அப்பகுதியில் கிடந்த ட்ரம்மை பரிசோதித்து பார்த்த போது அதிர்ந்து போயினர்.அதில் 2 வெட்டப்பட்ட கால்கள் மற்றம் 2 வெட்டப்பட்ட கைகள், மூதாட்டி ஒருவரின் சிதைந்த உடல் ஆகியவை கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போயினர். உடனே தடய அறியவல் துறையினருக்கு போலீசார் தகவல் கொடுத்து வரவழைத்தனர்.

அழுகிய நிலையல் கிடந்த அந்த உடலை பரிசோதித்ததில் உயிரிழந்து கிடந்தது கிட்டத்தட்ட 70 வயது மூதாட்டியாக இருக்கலாம் எனத் தெரியவந்தது. கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட அந்த சடலத்தை உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் அப்பகுதியில் விசாரணையில் இறங்கினர்.

அப்பகுதியில் வயதான பெண்மணி யாராவது காணாமல் போனதாக வழக்கு ஏதும் பதிவாகியிருக்கிறதா? என காவல்நிலையங்களில் விசாரித்தனர். தீவிர விசாரணையில், உயிரிழந்து சடலமாகக் கிடந்த மூதாட்டியின் பெயர் சுசீலாம்மா என்பது தெரியவந்துள்ளது.

இவர், கே.ஆர் புரத்தில் நிசர்கா லேஅவுட் அருகே உள்ள வாடகை வீட்டில் தன்னுடைய மகளுடன் வசித்து வந்திருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவர் காணாமல்போனதாகத் தெரிகிறது.

மூதாட்டியை கொலை செய்த நபர் உடலை மறைக்க துண்டு துண்டாக வெட்டியிருப்பது தெரியவந்துள்ளது. மூதாட்டியை கொலை செய்தது யார்? ட்ரம்மில் அடைத்து அப்பகுதியில் கொண்டு போட்டது யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

டெல்லியில் லிவ்இன் முறையில் உடன் வாழ்ந்த காதலியை கொன்று 35 துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை தெருக்களில் நாய்களுக்கு வீசிய சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதன் பிறகு இதுபோன்ற கொலை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வந்தன.

தற்போது பெங்களூருவில் மூதாட்டியின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.