;
Athirady Tamil News

தும்புத்தடியால் தாக்கிய ஆசிரியர்; மாணவர்கள் மூவர் மருத்துவமனையில்

0

பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர் மூன்று மாணவர்களை தும்புத்தடியின் கைப்பிடியால் தாக்கியதில் மூவரும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கபப்டுகின்றது.

பாதுக்க பிதேச பாடசாலை ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியர் மாணவர்களை தாக்கியதாக முறைப்பாடு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மற்ற இருவரின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட மூன்று மாணவர்கள் உட்பட 7 மாணவர்கள் பாடசாலையின் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றிருந்த வேளை மாணவர்களின் வகுப்புக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவர்களை தாக்கியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.