;
Athirady Tamil News

குழந்தைகளைப் பெறாமல் இருக்க முடிவு செய்துள்ள பெண்கள்! வெளியான அதிர்ச்சி காரணம்

0

உலகிலேயே மிக குறைந்த கருவுறுதல் விகிதம் கொண்ட நாடான தென் கொரியாவில் கடந்த ஆண்டு மேலும் சரிந்ததால் மக்கள் தொகை வீழ்ச்சியடைந்து பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.

தென் கொரிய பெண்ணின் வாழ்க்கையில் சராசரியாக எதிர்பார்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 2022-ல் 0.78 ஆக இருந்தது.

இந்த நிலையில், கடந்த 2023-ல் 0.72 ஆக குறைந்துள்ளதாக கொரிய புள்ளியல் தரவுகள் தெரிவிக்கின்றன.

மக்கள் தொகை வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்த போக்கை மாற்றியமைக்க தென் கொரிய அரசாங்கம் பல கோடி ரூபாய் செலவு செய்கிறது.

இருப்பினும், பெண்கள் தங்கள் தொழில் முன்னேற்றம், வருமானம் மற்றும் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவுகள் தொடர்பில் அதிகம் கவலைப்படுவதால் கருத்தரிப்பதை தள்ளிப்போடுகின்றனர்.

அல்லது குழந்தைகளைப் பெறாமல் இருக்க முடிவு செய்கின்றனர். இதன் காரணமாக மொத்த கருவுறுதல் விகிதம் தொடர்ந்து சரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.