;
Athirady Tamil News

வெளிநாட்டு கடன் தொடர்பில் அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

0

வெளிநாட்டில் இருந்து பெற்ற கடன்களை ஒப்புக்கொண்டபடி செலுத்தாவிட்டால் இலங்கையை ஒரு நாள் கூட முன்னெடுத்துச் செல்லமுடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வீதி திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அரசாங்கத்தை பராமரிப்பதற்கும் போதிய வருமானம் தற்போது எல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம்
கடந்த ஆண்டு முழுவதும் திறைசேரிக்கு மூன்று ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கிடைத்ததாகவும், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், நாட்டில் வாங்கிய கடனுக்கான வட்டிக்கு இரண்டு ட்ரில்லியன்களுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அதற்கேற்ப எஞ்சிய செலவுகளை கடனாகப் பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.