;
Athirady Tamil News

மாலைதீவுடனான போர் பயிற்சி! இலங்கையில் இருந்து திரும்பி சென்ற இந்திய கப்பல்கள்

0

மாலைதீவு மற்றும் இலங்கை கடற்படையுடன் போர் பயிற்சியில் ஈடுபட்ட இரண்டு இந்திய போர்க்கப்பல்கள் கொழும்பில் இருந்து நாடு திரும்பியுள்ளன.

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட முத்தரப்பு போர்ப் பயிற்சி முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு இந்திய கப்பல்கள் கடந்த 28 ஆம் திகதி காலி துறைமுகத்தை வந்தடைந்தன.

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட முத்தரப்பு போர்ப் பயிற்சியானது இந்த ஆண்டு பெப்ரவரி 22 முதல் 25 வரை நடைபெற்றது.

முத்தரப்பு போர்ப் பயிற்சி
இப்பயிற்சியில், இந்தியாவைச் சேர்ந்த கடலோர காவல்படை கப்பல்கள், இலங்கை மற்றும் மாலைதீவின் கடற்படைக் கப்பல்கள் பங்குபற்றின.

இந்தப் பயிற்சியானது, குறிப்பாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே, குறிப்பாக சீன ஆராய்ச்சிக் கப்பலான சியாங் யாங் ஹாங் 3 இயக்கத்திற்குப் பிறகு, அதிகரித்த பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் நடைபெற்றது.

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட முத்தரப்பு போர்ப் பயிற்சி முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு இந்திய கப்பல்கள் கடந்த 28 ஆம் திகதி காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இந்தநிலையில் குறித்த இந்திய போர்க்கப்பல்கள் தற்போது மீண்டும் இந்தியாவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.