;
Athirady Tamil News

மலை ஏறச் சென்றபோது ஏற்பட்ட அசம்பாவிதம்… பல்கலைக்கழக மாணவன் கவலைக்கிடம்!

0

ரம்புக்கனையில் உள்ள எலகல்ல மலையிலிருந்து தவறி விழுந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் மாவனல்லை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் வடமேல் பல்கலைக்கழகத்தில் 2ம் வருடத்தில் கல்வி கற்கும் கல்முனை பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே சிக்கியுள்ளார்.

இன்றையதினம் (10-03-2024) காலை மற்றுமொரு மாணவர் குழுவுடன் எலகல்ல மலையில் ஏறச் சென்ற வேளையிலேயே குறித்த மாணவன் தவறி விழுந்துள்ளார்.

கீழே விழுந்த மாணவனை மீட்க பெரகல இராணுவ முகாமின் அதிகாரிகள் குழு பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

காயமடைந்த பல்கலைக்கழக மாணவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.