;
Athirady Tamil News

திரவம் நிரப்பிய போத்தல்களில் பிஞ்சு பிள்ளைகளின் சடலம்… அதிரவைத்த சம்பவம்

0

திரவம் நிரப்பிய கண்ணாடி போத்தல்களுக்குள் இரண்டு குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர் என்று கருதப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆண் குழந்தைகளின் சடலம்
ஹொங்ஹொங்கின் Tuen Mun பகுதியில் காலியாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு ஆண் குழந்தைகளின் சடலத்தை தனித்தனி கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையில் துப்புரவு பணியாளர் ஒருவர் கண்டெடுத்தார்.

தகவல் அளிந்த பொலிசார் முன்னெடுத்த நடவடிக்கையில் 24 வயது ஆணும் 22 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில்,

வெள்ளிக்கிழமை பகல் 10 மணியளவில் குடியிருப்பு உரிமையாளரால் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளியால் அந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இறப்புக்கான காரணம்
இரு கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. ஆனால் நிரப்பட்ட திரவம் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும், இரண்டு குழந்தைகளின் இறப்புக்கான காரணம் தடயவியல் நோயியல் நிபுணரால் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.