;
Athirady Tamil News

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற மாணவனின் மரணம் தொடர்பில் கடிதம்

0

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பிலான பூரண அறிக்கையுடனனான கடிதம் ஒன்று கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலை மாணவன் கடந்த 11ஆம் திகதி திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மரணம் குறித்த பூரண அறிக்கை
இது தொடர்பாக முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு மாணவனின் மரணம் குறித்த பூரண அறிக்கையே இவ்வாறு திருக்கோவில் ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் கடிதத்தில் , மாணவனின் மரணத்திற்கு தீர்வினை பெற்றுத்தருமாறு பொது மக்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த மாணவனின் உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, வைத்தியசாலை அபிவிருத்தி குழு இந்த கடித்தை அனுப்பி வைக்கும் செயற்பாட்டில் ஈப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.