;
Athirady Tamil News

ரஷ்யாவிற்கு பேரிழப்பு : எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்

0

ரஷ்யாவின் எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீது,உக்ரைன் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக ரஷ்யாவின் சக்தி உற்பத்தி நிலையங்கள் மீது உக்ரைன் இந்த தாக்குதலை நடத்திவருகின்றது.

அந்தவகையில் குறித்த தாக்குதலில் பாரிய அழிவினை ரஷ்யா சந்தித்துள்ளதாக நம்பப்படுவதாக உக்ரைன் சுட்டிக்காட்டியுள்ளது.

எரிபொருள் விலை
தாக்குதல் காரணமாக எரிபொருளின் விலையை 02 வீதமாக அதிகரிப்பதாக அதிபர் புடின் அறிவித்துள்ளார்.

இதேவேளை,அவர் அதிபர் தேர்தல் ஒன்றிற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,ரஷ்ய-உக்ரெய்ன் மோதல் காரணமாக உலக வர்த்தகத்தில் தானியங்களுக்கான விலைகள் அதிகரித்திருந்த நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.