;
Athirady Tamil News

காசாவை சென்றடைந்தது முதலாவது மனிதாபிமான கப்பல்!

0

காசாவின் கடற்பகுதிக்கு சென்றுள்ள முதலாவது மனிதாபிமான கப்பல் மனிதாபிமான பொருட்களை தரையிறக்கியுள்ளது.

ஸ்பெயினை சேர்ந்த ஓபன் ஆர்ம்ஸ் என்ற கப்பலே காசாவின் கரையோர பகுதிக்கு சென்றுள்ளது.

பட்டினியின் பிடியில் காசா சிக்குண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ள நிலையில் சைப்பிரசிலிருந்து இந்த கப்பல் 200 தொன் மனிதாபிமான பொருட்களுடன் செவ்வாய்க்கிழமை(12) புறப்பட்டுள்ளது.

கப்பல்
தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஜெட்களை பயன்படுத்தி பாரம் தூக்கிமூலம் பொருட்கள் இறக்கப்பட்டு பாரவூர்திகளில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

காசாவிற்குள் தரைமார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் மனிதாபிமான பொருட்களை விநியோகிப்பது கடினமானதாக காணப்படுகின்ற நிலையில் இந்த முயற்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உணவுகளை வழங்கிய வேர்ல்ட் சென்ரல் கிட்ச்சன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

துறைமுகம்
காசாவில் இயங்கும் துறைமுகம் இல்லாததால் தற்காலிக இறக்குதுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் உணவு விநியோகம் எவ்வாறு இடம்பெறும் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

மேலும் 12 பாரவூர்திகளில் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.