;
Athirady Tamil News

கடற்படை தாக்கியதாக தமிழக கடற்தொழிலாளர் குற்றச்சாட்டு

0

இலங்கை கடற்படையினர் தன்னை தாக்கினர் என குற்றம் சாட்டியுள்ள தமிழக கடற்தொழிலாளர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து , யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பை அண்டிய பகுதிகளில் கடற்தொழிலில் ஈடுபட்ட 15 தமிழக கடற்தொழிலாளர்களை கடந்த வெள்ளிக்கிழமை கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

அவர்களை மறுநாள் சனிக்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த 15 தமிழக கடற்தொழிலாளர்களில் ஒருவர் , தன்னை இலங்கை கடற்படையினர் தாக்கினார்கள் என குற்றம் சாட்டிய நிலையில் அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.