;
Athirady Tamil News

10 செ.மீ அளவு வாலுடன் பிறந்த குழந்தை!

0

சீனாவில் ஆண் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

குறித்த ஆண் குழந்தை 10 சென்டிமீற்றர் அளவுடன் பிறந்துள்ளது.இதற்கு காரணம் Tethered Spinal Cord எனும் மருத்துவ நிலைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த வாலில் எந்தவித அசைவும் இருக்காது என்றும், நரம்பு மண்டலத்துடன் அது இணைந்து இருப்பதால் அதனை நீக்க முடியாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முள்ளந்தண்டு வடம்
முதுகெலும்பைச் சுற்றியுள்ள திசுக்களில் முதுகுத்தண்டு இணைக்கப்படும்போது, பொதுவாக முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இணைக்கப்பட்ட முள்ளந்தண்டு வடம் (Tethered Spinal Cord) ஏற்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும், இது பல்வேறு நரம்பியல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டில் குழந்தை ஒன்று வாலுடன் பிறந்துள்ளது. அது 5 அங்குல நீளம் வரை வளர்ந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.