;
Athirady Tamil News

மேற்கத்திய நாடுகள் உக்ரைனில் களமிறங்கும் நேரம் இது: பிரான்ஸ் ஜனாதிபதி வெளிப்படை

0

மேற்கத்திய நாடுகளின் படைகள் உக்ரைனில் களமிறங்கும் தேவை அதிகரித்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகளின் படைகள்
ஜேர்மன் மற்றும் போலந்து தலைவர்களை சந்தித்த பின்னரே மேக்ரான் குறித்த கருத்தை பதிவு செய்துள்ளார். உக்ரைனில் மேற்கத்திய நாடுகளின் படைகள் களமிறங்க வேண்டும் என்ற கருத்தை மேக்ரான் கடந்த மாதம் தெரிவித்த நிலையில், ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

ஆனால் ஜனாதிபதி மேக்ரான் தனது கருத்தில் உறுதியாக இருந்ததுடன், மேற்கத்திய நட்பு நாடுகள் முன்முயற்சி எடுக்காது என்று வலியுறுத்தினார். உக்ரைனில் மேற்கத்திய நாடுகள் களமிறங்குவதை தாம் விரும்பவில்லை என விளக்கமளித்துள்ள மேக்ரான், ஒரு கட்டத்தில் வேறுவழியின்றி உக்ரைனில் நாம் களமிறங்க வேண்டியிருக்கும் என்றும் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.

நடவடிக்கை எடுப்போம்
ஆனால், கண்டிப்பாக அது ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே என்றும் மேக்ரான் விளக்கமளித்துள்ளார். மேலும், போலந்து, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து ஒருபோதும் ரஷ்யாவால் உக்ரைனில் வெற்றிகொள்ள முடியாதபடி நடவடிக்கை எடுப்போம் என்றும் இறுதி வரையில் உக்ரைன் மக்களுக்கு துணையிருப்போம் என்றும் மேக்ரான் உறுதியளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.