;
Athirady Tamil News

அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பு

0

பொருட்களின் விலை அதிகரிப்பு வீதத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். ஆனால் தற்போதைய நிலைமை சரியாகிவிட்டது என்று அர்த்தப்படாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பணவீக்கம் என்பது பொருட்களின் விலைக் குறைவல்ல. அப்படியானால் பணவாட்டம் ஏற்பட வேண்டும். பொருட்களின் விலை அதிகரிப்பு வீதத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம்.

ஆனால் நிலைமை சரியாகிவிட்டது என அர்த்தப்படாது. சீரான நிலைக்கு வருவதற்கு உரிய காலம் எடுக்கும்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் நாட்டை இருந்த இடத்தில் இருந்து மேலே கொண்டு செல்லும் வகையில் தயாராகி வருகின்றன. ஜனாதிபதியின் கூற்றுப்படி, வருட இறுதியில் ஒரு புதிய மாற்றத்தை நாம் எவ்வாறு பார்க்க முடியும்?

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது இந்த நாட்டைப் பற்றித் தெளிவாகச் சிந்திப்பவர்கள் ஒன்று கூடும் மேடை அமைக்கப்படும்.

ஜனாதிபதித் தேர்வு
ஜனாதிபதித் தேர்தலுக்கு பல்வேறு நபர்கள் கோரிக்கை விடுத்தாலும் இவர்களுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் தொடர்பில் மக்களிடம் ஒரு உணர்வு உள்ளது.

அனுபவம், கல்வி, சர்வதேச பிரச்சினைகளை சமாளிக்கும் திறன், முடிவெடுக்கும் திறன், நாடு சிக்கலில் சிக்கியபோது கையாண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுப்பது முக்கியம்.

தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நல்லதொரு தீர்மானத்தை எடுக்கும் திறன் மக்களுக்கு உள்ளது. மக்கள் சிறந்த நபரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

அனுபவம், கல்வி, சர்வதேச பிரச்சினைகளைச் சமாளிக்கும் ஆற்றல், முடிவெடுக்கும் திறன், நாடு சிக்கலில் சிக்கியபோது கையாண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தலில் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.