;
Athirady Tamil News

மட்டக்களப்பில் 37 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

0

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பிரச்சினை தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் இடம்பெற்ற இவ் வழக்கு விசாரணையானது மேலும் 2 நாட்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வருகை
கடந்த ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு ஜனாதிபதியின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் – மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் – நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள் , சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 37 பேருக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

குறித்த வழகானது தீர்ப்புக்காக எதிர்வரும் 20ம் திகதி எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.