;
Athirady Tamil News

நெடுஞ்சாலையில் மற்றுமொரு கோர விபத்து: இளைஞர் பலி – இருவர் வைத்தியசாலையில் அனுமதி

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் Km 45.2R மற்றும் 45.3R தூண்களுக்கு இடையில் இன்று (19) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மத்தளையில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வானொன்று அதே திசையில் பயணித்த கொள்கலன் வாகனத்தின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் விசாரணை
இந்த விபத்தில் வானில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளதுடன், நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் 21 வயதுடைய காலி, நாகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வானின் சாரதி தூங்கியமையால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுஞ்சாலை சுற்றுலாப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.