;
Athirady Tamil News

கட்டுநாயக்கவில் சுமார் 10 கோடி பெறுமதியான நகைகளுடன் இருவர் கைது

0

10 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான நகைகளை டுபாயிலிருந்து கொண்டு வந்த இரு பயணிகளை இலங்கை சுங்க வருவாய் கண்காணிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது, இன்று(19) கட்டுநாயக்க விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கைது நடவடிக்கை
மதுபான போத்தல்களை அகற்றி வெளிநாட்டு மதுபான போத்தல்கள் போன்று தோற்றமளிக்கும் வகையில் பெட்டிகளில் சேமித்து வைத்து விமான நிலையத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல முற்பட்ட போதே இந்த நகைகள் கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு பயணிகளும் அம்பலாங்கொடை மற்றும் யாழ்ப்பாணம் பிரதேசங்களை வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.