;
Athirady Tamil News

17 ஆண்டுகளின் பின் முதன்முறையாக ஜப்பானில் ஏற்பட்டுள்ள மாற்றம்…!

0

ஜப்பான் மத்திய வங்கியானது, கடந்த 8 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்திய எதிர்மறை வட்டி விகிதங்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறான கொள்கையின் பிற அம்சங்களை இன்று முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பான் மத்திய வங்கியானது தனது பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஜப்பான் மத்தியவங்கி தெரிவித்துள்ளது.

வட்டி விகித கொள்கை
இதற்கு முன்பு வட்டி விகிதம் மறை 0.1 (-0.1) விகிதமாக இருந்த நிலையில், புதிய வட்டி விகித கொள்கை நேற்று  (19) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மறை 0.1 (-0.1) விகிதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 0 முதல் நேர் 0.1 (+0.1) ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

17 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் அதிகரித்திருப்பதானது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இதன் மூலமாக பொருளாதாரத்தின் மீதான தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும், நிதி சேவை நிறுவனமான போபா செக்யூரிட்டி நிறுவனத்தின் ஜப்பான் பிரிவு தலைவர் இசுமி தேவலியர் தெரிவித்துள்ளார்.

இறுதி மத்திய வங்கி
ஜப்பன் மத்திய வங்கி அதன் நிதி நிலைமைகளை தளர்வாக வைத்திருக்கும் கொள்கையை தொடர்ந்து பராமரிக்கும் என்றும், நிதி செலவுகள் அல்லது வீட்டுக்கடன் வட்டி விகிதங்களில் பெரிய அளவில் உயர்வு இருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்நிலையில், எதிர்மறை வட்டி விகிதங்களிலிருந்து வெளியேறும் இறுதி மத்திய வங்கியாக ஜப்பான் மத்திய வங்கியானது விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.