;
Athirady Tamil News

வீட்டிலிருந்து பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி தகவல்!

0

உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

இந்த நிலையில், டெல் நிறுவனம் வீட்டில் இருந்தே பணியாற்றும் தனது ஊழியர்கள் பதவி உயர்வுக்கு தகுதி பெற முடியாது என தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும் என்றும் டெல் தெரிவித்துள்ளது.

வீட்டிலிருந்து பணியாற்றுவோர் பதவி உயர்வு மற்றும் நிறுவனத்திற்குள் தங்களது பொறுப்பை மாற்றிக் கொள்ளவும் முடியாது.

கொரோனா தொற்று முன் இருந்தே ஊழியர்கள் வீட்டில் இருந்தும் பணியாற்ற அனுமதி அளித்த நிலையில், டெல் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு வீட்டிலிருந்து பணியாற்றி வரும் ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெல் நிறுவனத்தில் பல ஆண்டுகளாக வீட்டில் இருந்து பணியாற்றி வருவோருக்கு, இனிமேல் பதவி உயர்வு, பதவிகளை மாற்றிக் கொள்ள முடியாது என்ற அறிவிப்பு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.