இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்றையதினம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாடளாவிய ரீதியில் பல மாகாணங்களில் மனித உடலால் உணரக்கூடிய அதிக வெப்பநிலை, இன்றையதினம் (20) முழுவதும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடமேற்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களுக்கும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மொணராகலை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.