;
Athirady Tamil News

உக்ரைனுக்கு பேரிடி..! ஒரேநாளில் 215 வீரர்களை பலியெடுத்த ரஷ்யா

0

கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் மீண்டும் தீவிரம் அடைந்து வருகின்றது.

உக்ரைன் எல்லையில் அமைந்துள்ள பகுதிகளுக்குள் ரஷ்யா இராணுவத்தினர் ஊடுருவி தொடர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் உக்ரைனின் டோனெட்ஸ்க் நகரை குறிவைத்து ரஷ்ய இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தாக்குதல்
அத்தோடு பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை கொண்டு ரஷ்ய இராணுவத்தினர் உக்ரைன் பகுதிக்குள் ஊடுருவியுள்ளனர்.

மேலும் கடந்த திங்கள் கிழமை  இரவு நடத்தப்பட்ட இந்த தாக்குதலை உக்ரைன் இராணுவத்தினர் சமாளிக்க முயற்சித்து தோல்வியை தழுவியுள்ளனர்.

இராணுவ முக்கியத்துவம்
இதனால் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒர்லிவ்கா கிராமத்தை உக்ரைன் ராணுவம் ரஷ்யாவிடம் பறிகொடுத்துள்ளது.

இந்த தாக்குதலில் 215 வீரர்கள் கொன்று குவிக்கப்ட்டதாகவும் மற்றும் மூன்று கவச வாகனங்களை உக்ரைன் இழந்துள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு ஏற்கனவே கடந்த வாரம் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் ஒரே நாளில் 234 உக்ரைன் வீரர்கள் கொன்று குவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.