;
Athirady Tamil News

இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 2000 கிலோ பீடி இலைகள் தமிழகத்தில் பறிமுதல்

0

இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் தமிழகம் ஏர்வாடிக் கடற்கரைக்கு எடுத்து வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ பீடி இலைகள் தமிழகப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சுற்றிவலைப்பானது நேற்று(20.03.2024) இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் பரிசோதனை
இலங்கைக்குக் கடத்தும் நோக்கில் படகில் ஏற்றுவதற்காக ஒரு லொறியில் பீடி இலைகள் கடற்கரைக்கு எடுத்து வரப்பட்ட போது பொலிஸாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது லொறியைப் பரிசோதனை செய்த தமிழகப் பொலிஸார், அதில் இருந்து ஒவ்வொன்றும் 30 கிலோ எடையுடைய 70 பொதிகளை மீட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.