;
Athirady Tamil News

போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விவகாரம்: ஜெய்ர் போல்சனரோருக்கு எதிராக வழக்கு விசாரணை

0

பிரேஸிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனரோ போலியான கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தயாரித்தமை தொடர்பான வழக்கில் அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடத்த அந்நாட்டு காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமாக செயற்பட்டவராக விமர்சிக்கப்பட்ட நிலையில் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதையும் அவர் விமர்சித்திருந்தார்.

குற்றப்பத்திரம் தாக்கல்

இந்நிலையில், தனக்கும் தனது மகளுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக போலியான சான்றிதழ் தயாரிப்பதற்கு போல்சனரோ உத்தரவிட்டார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜெய்ர் போல்சனரோ மற்றும் 16 பேருக்கு எதிராக காவல்துறையினர் குற்றப்பத்திரம் தாக்கல் செய்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போல்சனரோ தோல்வியுற்றார். அதன்பின் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக சதிப்புரட்சி நடத்த முயன்றார் எனவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.