;
Athirady Tamil News

பாக்கு நீரினை கடந்த மாணவனுக்கு ஒரு இலட்சம் ரூபாய் நன்கொடை

0

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து உலக சாதனை படைத்த திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் ஹரிகரன் தன்வந்தைக் கனடா திருக்கோணமலை நலன்புரிச் சங்கம் ஓர் இலட்ச ரூபாய் பரிசுத் தொகையும் வெற்றிக் கிண்ணமும் வழங்கிக் கௌரவித்துள்ளது.

கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத் தலைவர் க.இரகுநாதன், அதன் காப்பாளரும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவருமாகியசண்முகம் குகதாசன் இவற்றை வழங்கியுள்ளனர்.

குறித்த நிகழ்வு நேற்று திருக்கோணமலை இந்துக் கல்லூரியில் மாணவர் ஒன்றுகூடலின் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர், துணை முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தன்வந்தின் பெற்றோர் உள்ளடக்கிய பலரும்கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.