;
Athirady Tamil News

யாழ்.நாவாந்துறை உணவகத்திற்கு 2 இலட்ச ரூபாய் தண்டம்

0

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு 2 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்களால் நாவாந்துறை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது , பழுதடைந்த உணவுகள் ,இறைச்சி கறிகள் என்பன மீட்கப்பட்டதுடன் , சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையிலான சூழல்கள் அவதானிக்கப்பட்டது.

அதனை அடுத்து உரிமையாளருக்கு எதிராக யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகர்களால் 20 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுக்களை உரிமையாளர் ஏற்றுக்கொண்டதை அடுத்து , ஒவ்வொரு குற்றத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய் வீதம் , 20 குற்றச்சாட்டுக்களுக்கு 2 இலட்ச ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.