;
Athirady Tamil News

அவுஸ்திரேலிய மாணவர் விசாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

0

அவுஸ்திரேலியா செல்ல இருக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கான புதிய விசா விதிமுறைகள் நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இந்த வாரம் முதல் புதிய விசா விதிமுறைகளை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவிற்கு குடியேறுபவர்களின் எண்ணிக்கை அண்மை காலமாக அதிகரித்ததையடுத்தே அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கற்கை நெறி
மேலும், அவுஸ்திரேலியாவிற்கு குடியேறும், குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதனால், அங்கு வீடுகளின் வாடகை மற்றும் இடப்பற்றாக்குறை என்பன அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் பட்டதாரி கற்கை நெறிகளுக்கான விசாக்கள் மற்றும் மாணவர் விசாக்களுக்கான ஆங்கில மொழித் தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விதிகளை மீறினால்
இதன் மூலம் ஆங்கிலமொழி தொடர்பான அறிவு முன்பு எதிர்ப்பார்க்கப்பட்டதை விட சிறந்த மட்டத்தில் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சர்வதேச மாணவர்கள் தொடர்ந்து விதிகளை மீறினால் அவர்களின் கல்விச் செயற்பாடுகளை இடைநிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.