;
Athirady Tamil News

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடியாக கைது : டெல்லியில் பரபரப்பு

0

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை நேற்று  வியாழக்கிழமை இரவு அமுலாக்கத் துறை கைது செய்தது. இதனால், டெல்லியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

டெல்லியில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் அமுலாக்கத் துறை அதிகாரிகள் சுமார் மூன்று மணி நேரம் விசாரணையில் ஈடுபட்டனர். அதன்பின், அதிரடியாக கைது செய்யப்பட்ட அவர் இன்று  நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

இந்திய முதலமைச்சர் ஒருவர் பதவியில் இருக்கும்போதே
இதனிடையே, ஆம் ஆத்மி நிர்வாகிகளும் தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருவதால், காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய முதலமைச்சர் ஒருவர் பதவியில் இருக்கும்போதே கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.