;
Athirady Tamil News

24 மணிநேரத்தில் 32 போர் விமானங்கள்:சீனா மீது குற்றம் சுமத்தும் தைவான்

0

தைவான் தங்கள் நாட்டின் மீது கடந்த 24 மணிநேரத்தில் 32 சீனப் போர் விமானங்கள் கண்டறியப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளது.

சீனா தங்கள் பிரதேசத்தின் ஒரு பகுதி என்று உரிமை கோருவதால், தைவானுக்கு இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில் தைவானைச் சுற்றி 5 கடற்படைக் கப்பல்கள் இயங்குவதை அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

அத்துடன் 24 மணிநேரத்தில் 32 சீன இராணுவ விமானங்கள் தீவைச் சுற்றி கண்டறியப்பட்டதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனா இராணுவம் அழுத்தம்
இந்நிலையில்,கடந்த மாதம் தைவானைச் சுற்றி சீனாவின் 11 கடற்படைக் கப்பல்கள் கண்டறியப்பட்டதாக தைவான் கூறியது.

அதேவேளை,சந்திர புத்தாண்டு விடுமுறையின்போது தொடர்ச்சியாக 2 நாட்களில் 8 சீன பலூன்களை தைவான் கண்டறிந்தது.

இந்த ஆண்டு தீவைச் சுற்றி 33 சீனப் போர் விமானங்களைக் கண்டறிந்தது, மிக அதிகமான எண்ணிக்கையாகும்.

தைவான் மீது சீனா சமீபத்திய ஆண்டுகளில் இராணுவ அழுத்தத்தை அதிகரித்துள்ளது.

இதனால், தீவைச் சுற்றி போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை நிலைநிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.