;
Athirady Tamil News

அப்பாவை சிலிண்டரால் தாக்கிக் கொன்ற மகன்! தெரிய வந்த காரணம்

0

சென்னையில் நபர் ஒருவர் சொத்து பிரச்சனையில் தனது தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சொத்து பிரிப்பதில் தகராறு
சென்னை கொளத்தூரின் ராஜமங்கலம் பாபாநகர் பகுதியில் வசித்து வந்தவர் மதுசூதனன் (64).

கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் மற்றும் மகள்கள் உள்ளனர். இதில் இரண்டு மகன்களுக்கும் திருமணமாகிவிட்டது.

இவர்கள் அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், மதுசூதனின் மகன் ஜார்ஜ் புஷ் தந்தையுடன் சொத்து பிரிப்பது குறித்து தகராறு செய்துள்ளார்.

தந்தையை தாக்கிய மகன்
அப்போது இருவருக்கும் இடையே சண்டை முற்றியதில், ஜார்ஜ் புஷ் சமையலறையில் இருந்த சிலிண்டரை எடுத்து தந்தையை தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மதுசூதனன் உயிரிழந்துள்ளார். இதனால் வீட்டில் இருந்தவர்கள் ஆத்திரத்தில் ஜார்ஜ் புஷை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அத்துடன் இச்சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.