;
Athirady Tamil News

யாழ்.ஹரிகரன் இசை நிகழ்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணம் நீதிமன்றில் ஒப்படைப்பு

0

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற ஹரிகரன் இசை நிகழ்வின் போது தவறவிடப்பட்ட தங்க ஆபரணம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டு , யாழ்.நீதவான் நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இசை நிகழ்வு முடிவடைந்த வேளை தங்க ஆபரணம் ஒன்று கண்டெடுக்கப்பட்டு , இதுவரை காலமும் பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வேளை எவரும் நகை தொலைந்தமை தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய வராத நிலையில் , பொலிஸாரினால் நகை நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

நகையை தொலைத்தவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தமது நகை தொடர்பான தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.