;
Athirady Tamil News

நீல் ஆம்ஸ்ட்ராங் தடம் பதித்த இடத்தை கண்டுபிடித்த சந்திரயான்-2! இஸ்ரோ பெருமிதம்

0

நிலவில் முதன்முதலாக தரையிறங்கிய நீல் ஆம்ஸ்ட்ரோங் இன் கால்தடத்தினை சந்திரயான்-2 இன் ஆர்பிட்டர் கருவி படம் பிடித்து அனுப்பியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி நிலவில் என்ன இருக்கிறது என்பதை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சந்திரயான்- 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது.

இதில் இருந்து பிரிந்த தகவல் தொடர்பு கருவியான ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் தொடர்ந்து நிலவை சுற்றி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

அப்பல்லோ விண்கலம்
சுமார் 3 ஆண்டு காலம் நிலவை சுற்றும் இந்த ஆர்பிட்டர் நிலவின் கரடு முரடான நிலப்பரப்பு உள்ளிட்ட பல்வேறு அரிய வகை புகைப்படங்களை இஸ்ரோவுக்கு அனுப்பி வருகிறது.

இந்நிலையில் தற்போது 54 ஆண்டுகளுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் திகதி முதன் முறையாக நிலவில் தடம்பதித்த நாசா விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ரோங் இன் காலடித்தடத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது.

அப்பல்லோ விண்கலம் மூலம் நிலவில் தரை இறங்கிய நீல் ஆம்ஸ்ட்ரோங், நிலவில் கால் பதித்த முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.

கால் பதித்த இடத்தில்
அப்போது அவர் தான் கால் பதித்த இடத்தில் ஒரு கருவியை வைத்ததாக கூறப்பட்டது, அந்த கருவி தற்போதும் செயல்பட்டு வருவதனால், அந்த இடத்தை தற்போது சந்திரயான்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது.

இந்த புகைப்படம் தற்போது இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, இதனால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டு வெகுவாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.