;
Athirady Tamil News

பிரேசிலை தாக்கிய பாரிய புயல் : மகளை காப்பாற்றிவிட்டு உயிரைவிட்ட தந்தை

0

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் மிமோசா டோவுல் பகுதியில் ஏற்பட்டுள்ள புயல் மழை காரணமாக தற்போது வரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த புயலில் சிக்கிய தந்தை ஒருவர் தனது மகளான சிறுமியை காப்பாற்றிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புயல்,மழை காரணமாக பொதுமக்கள் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ மாநிலங்களை புயல் தாக்கியதையடுத்து சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதனால் மலைப்பகுதிகள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு மற்றும் மண்சரிவும் ஏற்பட்டுள்ளது.

மீட்பு பணி
மண்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் மோப்ப நாய்களின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருவதாக மீட்பு படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில்,இடிபாடுகளில் இருந்து 16 மணித்தியாலத்திற்கு பிறகு ஒரு சிறுமியை பத்திரமாக மீட்டுள்ளனர்.

ஆனால், அந்த சிறுமியின் தந்தை மகளை காப்பாற்றி விட்டு அவர் அருகிலேயே உயிர் இழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த புயலில் மிமோசா டோவுல் பகுதியில் பலர் உயிரிழந்துள்ளதாகவும் தொடர்ந்து, மீட்பு பணி நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.