;
Athirady Tamil News

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா நாளை

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா நாளை புதன்கிழமை (27) பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் காலை 10 மணி முதல் மாலை 04 மணி வரை நடைபெறவுள்ளது.

யாழ் பல்லைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறீசற்குணராஜா முதன்மை விருந்தினராகவும் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் சிறப்பு விருந்திராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ள உலக நாடக தினவிழாவில் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களின் நாடகங்கள் மற்றும் தொழில்வாண்மை நாடகக் கலைஞர்களின் நாடகங்கள் இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் இவ்நாடக விழாவில் பங்கேற்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.