;
Athirady Tamil News

அதிபர் தேர்தல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

0

அரசியலமைப்பு ரீதியாக அதிபர் தேர்தல் இவ்வருடம் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கு அதிபர் ரணில் அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அண்மையில் அதிபரினால் நியமிக்கப்பட்ட அரசியல் அமைச்சரவைக்கு இது அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிபர் தேர்தல்
கடந்த இரண்டு அமைச்சரவைக் கூட்டங்களிலும் ரணில் தேர்தல்கள் குறித்து ஆலோசித்ததாகவும் திட்டமிட்டபடி அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படாத போதிலும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.