;
Athirady Tamil News

மொஸ்கோவில் நிகழ்ந்த பயங்கரம்! படுகொலையாளர்கள் கூறிய காரணம்

0

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் 133 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, பணத்திற்காக மக்களை சுட்டுக்கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

க்ரோகஸ் சிட்டி ஹாலில் கடந்த 23ம் திகதி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர், சந்தேகநபர்கள் நால்வரும் காயங்களுடன் சக்கர நாற்காலியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நால்வரையும் எதிர்வரும் மே மாதம் 22ஆம் திகதி வரை விசாரணைக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.