;
Athirady Tamil News

யாழில் முற்றாக விடுவிக்கப்பட்ட காணிகள்

0

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மூன்றாவது இராணுவ முகாமும் முற்றாக விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களில் காணி விடுவிப்பானது கடந்த 10 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த நடவடிக்கையானது இன்று(27) இடம்பெற்றுள்ளது.

விடுவிக்கப்பட்ட காணிகள்
இதன்படி வறுத்தலைவிளான் (J/241)கிராம சேவையாளர் பிரிவில் சிறிலங்கா லைற் இன்பினிற்ரி படைப்பிரிவினர் கொண்டிருந்த 21 குடும்பங்களுக்குச் சொந்தமான 23.36 ஏக்கர் காணி முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் முழுமையாக விடுவிக்கப்பட்ட கிராம சேவையாள் பிரிவாக வறுத்தலைவிளான் கிராம அலுவலர் பிரிவும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.