;
Athirady Tamil News

தந்தை செல்வாவின் பிறந்ததின நிகழ்வு

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்ததின நிகழ்வு, யாழ்.நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில்
செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான நா.வேதநாயகன் தலைமையில் எதிர்வரும் 30ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3மணிக்கு நடைபெறவுள்ளது.

நிகழ்வில் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான இ.பேரின்பநாயகத்தின் தொடக்கவுரை ஆற்றுகையும், கம்பவாரிதி இ.ஜெயராஜ் தலைமையிலான சொற்சமரும் இடம்பெறவுள்ளதாகச் செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.