;
Athirady Tamil News

கொழும்பில் மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் படுகாயம்

0

கொழும்பு – பொரளை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்று (28) இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் சாரதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான விசாரணை
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை கடக்க முற்பட்ட போது, பின்னால் வந்த பேருந்து மோதியதில் இரண்டு பேருந்துகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டுள்ளார்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.